Saturday 12 March 2011

தேர்தல் ஊளை

நரிகளின் ஊளை
அடிக்கடி கேட்கும்
தந்திரங்கள் பலிக்க
பல ஜாலம் காட்டும்

மந்தை கூட்டம் இதுவென
எண்ணி எண்ணி
மயங்கி
பட்டியில் அடைக்க முனையும்

குவளை வழியும்
ஊண் நெய் இழுக்கும்
இழுத்தால் என்ன
இனி இல்லை
கவலை
நீதான் முற்றும் தெரிந்த மானுடர் ஆயிற்றே

ஊளையின் ஓலம் சாபமா?
வரமா? உன் கையில்













தொடக்கம்

தமிழில் ஏகப்பட்ட வலைப்பூக்கள் தொடங்கப்பட்டுள்ளன. எழுதப்பட்டு வருகின்றன. வலைப்பூ நமக்கு நம் எண்ணச் சிதறல்களைக் கட்டுப்பாடு இல்லாமல் பகிர்ந்து கொள்ளும் களமாகவும் விளங்குகின்றது. இது ஒரு சுதந்திர உணர்வினை நமக்கு அளிக்கிறது என்றாலும்,
தமிழனுக்கு என்று சில தனித்தன்மை இருக்கின்றது. அதை இழந்து விடுவோமோ என்னும் தவிப்பில் உங்களுடன்(உலகத் தமிழர்களுடன் )என் சிந்தனை பகிர்வினை பகிருந்துகொள்வதற்கான தளமாக இதனைப்பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆதரவுடன்..