Saturday 12 March 2011

தேர்தல் ஊளை

நரிகளின் ஊளை
அடிக்கடி கேட்கும்
தந்திரங்கள் பலிக்க
பல ஜாலம் காட்டும்

மந்தை கூட்டம் இதுவென
எண்ணி எண்ணி
மயங்கி
பட்டியில் அடைக்க முனையும்

குவளை வழியும்
ஊண் நெய் இழுக்கும்
இழுத்தால் என்ன
இனி இல்லை
கவலை
நீதான் முற்றும் தெரிந்த மானுடர் ஆயிற்றே

ஊளையின் ஓலம் சாபமா?
வரமா? உன் கையில்













No comments:

Post a Comment